ஆற்றலின் 48 விதிகள்
ஆற்றலின் 48 விதிகள் (The 48 Laws of Power) என்ற நூல் ரொபட் கிறீன் என்பவரால் எழுதப்பட்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன. அந்த நூல் குறிப்பிடும் முக்கியமான கூற்றுக்கள் சிலவற்றின் தமிழாக்கம் இங்கே:
தன்னுடைய சொற்களைக் கட்டப்படுத்தாதவன் தன்னையும் கட்டுப்படுத்த மாட்டான். அவன் மதிப்புக்கும் தகுதியற்றவன்.
உன்னுடைய தனித்திறமையையும் உன்னையும் உலகிற்கு நீ வெளிப்படுத்தும்போது, சீற்றம், பொறாமை, பிற பாதுகாப்பற்ற வெளிப்படுத்தல்கள் போன்றவற்றை இயற்கையாகவே நீ தூண்டிவிடுவாய். மற்றவரின் இவ்வாறான சிறுமைத்தனமான உணர்வுகள் பற்றி கவலைப்படுவதில் நீ உன் வாழ்க்கையை செலவிடத் தேவையில்லை.
செயற்பாட்டின் வழி நிச்சயமில்லாவிட்டால், அதனைச் செய்ய வேண்டாம். உன்னுடைய சந்தேகமும் தயக்கமும் செயற்படுத்தலில் தொற்றிவிடும். துணிவின்மை ஆபத்தானது. ஆகவே, துணிச்சலாகச் செல்வதே சிறப்பானது. துணிவுக்கூடாக நிகழ்ந்த எந்தத் தவறையும் இன்னும் அதிக துணிவுடன் இலகுவாக திருத்திக் கொள்ள முடியும். ஒவ்வொருவரும் துணிவைப் பாராட்டுகிறார்கள். யாரும் துணிவின்மையைப் புகழ்வதில்லை.
நட்பும் காதலும் ஒவ்வொரு மனிதனையும் அவனுடைய விருப்பங்களுக்கு குருடாக்கிவிடுகிறது.
மாற்றத்திற்காகவோ அல்லது வதந்திகளுக்காகவோ உன்னுடைய தனிச்சிறப்பை விட்டுவிட வேண்டாம். இது உன்னுடைய வாழ்க்கையின் கலைப்படைப்பு. இதனை நீதான் செதுக்க வேண்டும், சாணை தீட்ட வேண்டும். ஒரு கலைஞனுக்குரிய கவனத்துடன் வெளிக்காட்ட வேண்டும்.
பல முக்கியமான சிந்தனையாளர்கள் சிறைச்சாலைகளில்தான் உருவாக்கப்படுகிறார்கள். அங்குதான் ஒன்றும் செய்யாமல் சிந்தனை மட்டும் செய்ய முடியும்.
நண்பர்களிடத்தில் விழிப்பாயிரு. அவர்கள் பொறாமையால் இலகுவாக தூண்டப்படுவதால், மிகவும் விரைவாக உன்னை மறுதலித்துவிடுவார்கள். அவர்கள் கெட்டு, முறைகேடானவர்களாக மாறிவிடுவார்கள். ஆனால் உன் முந்தைய எதிரியை வாடகைக்கு அமர்த்து. அவன் தன்னை நிரூபிப்பதற்கு அதிகம் இருப்பதால், நண்பனைவிட மிகவும் உண்மையாக இருப்பான். ஆகவே, எதிரியைவிட நண்பனிடத்தில் அதிகம் பயப்பட வேண்டும். உனக்கு எதிரியே இல்லாவிட்டால், அவர்களை உருவாக்கும் வழியைத் தேடு.
மேய்பனைத் தாக்கு, மந்தைகள் சிதறிவிடும்.
ஆற்றலுக்கான திறவுகோல் என்பது உன்னுடைய எல்லா விரும்பங்களுக்கும் ஏற்ற சிறந்தவர்களை கண்டு கொள்வதாகும். நண்பர்களை நட்புக்காக வைத்துக்கொள். ஆனால், திறமையுடனும் தகுதியுடனும் வேலை செய்.
கடவுளே, நண்பர்களிடமிருந்து என்னைக் காத்தருளும். எதிரிகளை நான் பார்த்துக் கொள்வேன்.
மனித நாவு மிருகம் போன்றது. சிலர்தான் அதனை வெற்றி கொள்கிறார்கள். அது தன்னுடைய கூட்டை உடைத்து வெளியேற தொடர்ந்து முயற்சிக்கிறது. அது அடைக்கப்படாவிட்டால், கொடியதாக மாறி உன்னை தேவனையில் ஆழ்த்திவிடும்.
இறக்கும் தருவாயில் இருந்த ஒரு அரசியல் வல்லுனரிடம் இளவரசர் கேட்டார் “உன்னுடைய எல்லா எதிரிகளையும் அரசன் மன்னிக்கிறாரா?”. பதிலாக, “என்னுடைய எதிரிகள் எல்லோரையும் நான் மன்னிக்கவில்லை. அவர்கள் எல்லோரையும் நான் சுட்டுவிட்டேன்.”
உன்னுடைய சொந்தப் பாணியில் அரசன் போலவே இரு. அரசன் நடத்தப்படுவது போலவே நடந்து கொள்.
நினைவிற்கொள்: சிறந்த வஞ்சகமானவர்கள் அவர்களின் போக்கிரித்தனமான பண்புகளை மறைக்க அவர்களால் செய்யக்கூடிய எதையும் செய்வார்கள். மற்றவர்களிடம் அவர்களின் வஞ்சகத்தனத்தை மாறுவேடமாக்க நேர்மையின் ஆகாயத்தை ஒரு இடத்தில் பயிரிடுவார்கள். அவர்களிடம் உள்ள ஆயுதங்களில் நேர்மை என்பது சாதாரண பொறியாகும்.
மற்றவரைவிட சிறப்பாக காட்டிக் கொள்வது எப்போதும் ஆபத்தானது. இதைவிட பெரிய ஆபத்து என்னவென்றால் பிழையோ அல்லது குறைவோ இல்லாது காட்டிக் கொள்வதுதான். பொறாமை இரகசிய எதிரிகளை உருவாக்கும்.
சமூகம் உன்னில் சுமத்தும் பாத்திரத்தை ஏற்காதே. உன்னை மீளவும் உருவாக்க புதிய அடையாளத்தை வார்ப்பிடு. மாற்றவர்கள் உன்னில் உருவாக்குவதற்குப் பதில் உன்னுடைய உருவத்திற்கு நீயே பொறுப்பாகவிரு.
ஒருபோதும் பெறுமதியான நேரத்தை அல்லது மனதின் சமாதானத்தை மற்றவர்கள் நிமித்தம் வீணடிக்க வேண்டாம். இது மிகவும் அதிகமான விலை.
ஆற்றலின் விளையாட்டை வெற்றி கொள்ள, உன்னுடைய உணர்வுகளை நீ ஆள வேண்டும். சுய கட்டுப்பாட்டை வெற்றி கொள்ள முடிந்தாலும், உன்னைச் சுற்றியுள்ள உணர்ச்சிமயமான அமைப்புக்களை உன்னால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. அதுவே பெரும் ஆபத்தை வழங்குகிறது.